12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 25

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 25

கேள்வி 25 : வேளாண் வேதிப்பொருட்கள் என்றால் என்ன ? அவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

வேளாண் வேதிப்பொருட்கள் :

தாவரங்கள் வளர்வதற்கும் மற்றும் தீங்குயிரிகளை கட்டுப்படுத்துவதற்கும் வேளாண் தொழிலில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் வேளாண் வேதிப் பொருட்கள் எனப்படும்.

விளைவுகள் :

  1. நன்மையளிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் மண் வாழ் உயிரினங்களை அவை கொல்லக்கூடும்.
  2. நீர் நிலைகளில் மிகை உணவூட்டத்தை ஏற்படுத்தும்
  3. நீர் வாழ் விலங்குகளையும் அவற்றின் உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது.
  4. மிகக்குறைந்த அளவு தீங்குயிர்கொல்லிகளை கொண்டிருந்தாலும், அந்த நீர் மனித பயன்பாட்டிற்கு தகுதியற்றதாகும்.
  5. இவ்வேதிப் பொருட்களின் துகள்கள் (துாசிப்படலம்) மற்றும் எச்சங்கள் காற்று மாசுபாட்டினை ஏற்படுத்தும்.
  6. மாசடைந்த காற்றினை உள்ளிழுப்பது சுவாசக் கோளாறுகளை ஏற்படத்தும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement